தன்னை அறிமுகப்படுத்தி ஆளாக்கிய ஆசான் பாலசந்தருக்கு நெருக்கடியில் கைகொடுத்து உதவி செய்தாகிவிட்டது. கையிலிருந்து ஒரு பைசா செலவில்லாமல் படம் தயாரிக்க ஏதுவாக வேறொரு தயாரிப்பாளரைப் பிடித்துக் கொடுத்து குருநாதரின் கைகளில் பல கோடிகள் கைகளில் கிடைக்க ஏற்பாடு செய்தார் ரஜினி.
அடுத்த கடமை ஒன்று பாக்கியிருக்கிறது சூப்பர் ஸ்டாருக்கு. முன்பே கிசுகிசுத்த மாதிரி பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான பஞ்சு அருணாசலத்தையும் கை தூக்கிவிடத் தயாராகி விட்டாராம் சூப்பர் ஸ்டார். குசேலனுக்குக் கொடுத்த மாதிரி 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இந்தக் கடமையையும் முடித்துவிட்டால் நிம்மதியாக ‘ரோபோ’வுக்குப் போய்விடலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கிறதாம்.
இதற்கிடையில் ‘ரோபோ’ படத்தின் போட்டோ ஷூட் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
